இந்தோனேசியாவில் எரியும் காட்டு தீயால் சிங்கப்பூருக்கு ஏற்படும் பாதிப்பு…!!!
இந்தோனேசியாவில் எரியும் காட்டு தீயால் சிங்கப்பூருக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த காட்டுத் தீ சிங்கப்பூரின் காற்றுத்தரத்தை ஆரோக்கியமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
தற்போதைய நிலையின் படி 24 மணிநேர PSI குறியீடு 107 முதல் 124 வரை தீவு முழுவதும் பதிவாகியுள்ளது. வேற இடங்களை காட்டிலும், மேற்கு, தெற்குப் பகுதிகளில் புகைமூட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
காலை 8 மணி முதல்1 மணிநேரம் வரை PM2.5 குறியீடு மத்திய பகுதிக்கு 37யை எட்டியுள்ளது.
சிங்கப்பூரில் காற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் போது முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.