போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இருவர் கைது…!!!
ஆங் மோ கியோ அவென்யூ 3 இல் வைத்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிங்கப்பூரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குறித்த இரு சிங்கப்பூர் நபர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து மாவு போன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட அத்தகைய போதைப் பொருளை வைத்திருப்பது, கடத்துவது, தருவிப்பது அல்லது ஏற்றுமதி செய்வது மற்றும் அதை தவறாக பயன்படுத்துவது போன்ற அனைத்தும் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
ஒருவர் அத்தகைய போதைப்பொருளைக் கடத்தியது நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் குறைந்தபட்சம் ஐந்து வருடம் வரை சிறைத்தண்டனையும், ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படும்.