இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கம்…!!!
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்களும் ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவுப்பகுதியில் இன்று 6.0 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் இந்த இரண்டு நிலநடுக்களும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரைக்கும் வெளியிடவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா இருப்பதனால் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தாலும், எரிமலை வெடிப்புகளாலும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .