அல்பேனியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்..!!
அல்பேனியாவின் தலைநகரான ரிரானா, துறைமுக நகரான டுரெஸ் போன்றவற்றில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ரிக்டர் அளவில் 5.6 பதிவாகியுள்ளதுடன், அதையடுத்து சிறு சிறு நிலநடுக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
30 வருடங்களுக்கு பிறகு அல்பேனியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் இதுவே என அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மைதானங்களிலும், வீதிகளிலும் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் 68 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அல்பேனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.