அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் துப்பாக்கி சூடு..!! 5 பேர் உயிரிழப்பு…!!!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமெரிக்கா பொலிஸார் கூறியுள்ளனர்.
மேற்கு டெக்ஸாஸ் உள்ள மிட்லேண்ட் பகுதியில் தனது வாகனத்தில் இருந்த ஒருவர் அங்கு சென்று கொண்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் போது அமெரிக்கா அஞ்சல் சேவையின் மகிழுந்து ஒன்று கடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் பகுதியில் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், மற்றுமொரு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுளளது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.