சீனாவில் நடந்த கோர விபத்து..!!!
சீனாவின் ஜியென்சு மாநிலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்
பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்றும் டிரக் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடைபெற்றுள்ளதோடு, பேருந்தில் 69 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கான காரணம் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.