செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த போது செல்போனின் பேட்டரி வெடித்து சிதறியதால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி…!!!
செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த போது செல்போனின் பேட்டரி வெடித்து சிதறியதால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த 14 வயதுடைய Alua Asetkyzy Abzalbek என்ற சிறுமி தனது வீட்டின் அறையில் நள்ளிரவில் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
மறுநாள் காலையில் அவரை எழுப்புவதற்காக அறையின் உள்ளே நுழைந்த அவருடைய பெற்றோர் மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், இரவில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த சிறுமி செல்போனை சார்ஜ் போட்டபடியே உறங்கவிட்டார். இதனால் அதிக சூடேறிய பேட்டரி வெடித்து சிதறியுள்ளது.
இதில் சிறுமியின் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.