அமெரிக்கா கடலில் கவிழ்ந்த 4,000 கார்களை ஏற்றி வந்த தென்கொரியா கப்பல்..!!! 3 தென்கொரியர்கள் மீட்பு..!!
அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கடல் பகுதியில் 4,000 கார்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த கப்பலில் இருந்து 3 தென்கொரியர்கள் மீட்கப்பட்டனார்.
குறித்த சரக்குக் கப்பலில் துளையை ஏற்படுத்தி அவர்களை வெளியே கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கக் கடற்படையினர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இன்னும் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் அவரை மீட்கத் தற்போது போராடி வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் திடீரென தீ ஏற்பட்டதால், இரவு நேரங்களில் மீட்புப் பணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று 20 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.