படுகாயங்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. அவருடன் இருந்த தோழி பவானி மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்பட நாயகியும் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் ஆபதான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நேற்று பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் அவரது தோழிகள் காரில் சென்றுகொண்டிருந்த போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் யாஷிகா மற்றும் அவரது இரண்டு தோழிகள் படுகாயங்களுடன் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் யாஷிகா மற்றும் நண்பர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் தற்போது கிடைத்த தகவலின் படி யாஷிகா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே நிலையை நிலையை கூறமுடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தின் போது யாஷிகா மற்றும் தோழிகள் போதையில் இருந்தார்களா என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது, அதிகாலையில் வெளியான இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!