ஆபத்தை ஏற்படுத்தும் ஆசையாய் நாம் உண்ணும் மீன்கள்.! அட நிஜம் தான் படித்து மற்றவர்களும் அறிய பகிருங்கள்..!
மீன் பிரை, மீன் குழம்பு, மீன் வறுவல், யம்மீ ஒரு கட்டு கட்டிட வேண்டியது தான்….மீன் என்றதும் பலரு வாயில் எச்சில் வரும். ஆனால் எல்லாமே அளவுக்கு அதிகமானால் ஆபத்து என்பதை அறிவியல் கூறுகின்றது. பொதுவாக சின்ன மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். அன்றாடம் சிறிய வகை மீன்கள்..சாப்பாட்டில் சேர்த்துகொள்வது அவசியமாகிறது..அதனால் கல்சியம்,புரோடின்,போன்றவவை கிடைக்கிறது.
அதனால் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாத சில மீன் வகைகளும் உள்ளது..அவை என்ன என பார்க்கலாம்..! விலாங்கு மீன். இந்த மீனில் poly chlorinate bipheny அதிக அளவில் இருப்பது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதாம். அதே போல் இந்த மீனில் இருக்கும் பாதரசமும் ஆபத்தை ஏற்படுத்தும். மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் இதனை உணவில் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..! அடுத்து சூறை மீன்: இது அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடியது. சுவையில் யம்மீ… ஆனால் ஆபத்தும் உயரத்தில் இருக்கிறதாம் ஆசைக்கு ஒரு நாள் இரு நாள் சாப்பிடுவது பரவாயில்லை. ஆனால் பேராசையில் சாப்பிட்டால் அவ்வளவு தானாம்.
மீன்களில் அதிக அளவிலான பாதரசத்தை கொண்ட மீன் வகையில் இதுவும் சேர்கிறதாம். அதனால் அளவோடு சாப்பிடுவோம்.நலமாக வாழ்வோம்..! அடுத்து வாளை மீன்..: யோவ் இந்த மீனை பற்றி குண்டு ஏதும் போடாத என நீங்கள் மனதில் நினைப்பதை தான் நானும் நினைக்கிறேன் ஆனால் அறிவியல் மிரட்டுதே. சுவையில் நாவூர வைக்கும் மீன்களில் முதலிடம் வாளை மீனுக்கு தான்.
அதுவும் அம்மா கை வாளை மீன் குழம்புக்கு அடிமையாகாத யாருமே இருக்க முடியாது. ஆனால் ஆபத்தும் இருக்கிறதாம். இதனையும் அளவோடு சாப்பிட வேண்டுமாம். இல்லாவிட்டால் ஆபத்து தானாம். இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது மூளையை பாதிக்குமாம். நமக்கு அது இல்லை தான் இருப்பினும் வளரும் குழந்தைகளுக்கு அளவோடு கொடுப்போம்….வாரம் ஒருமுறை சாப்பிட்டால் எதுவும் ஆகாது..ஆனால் அதிகம் விலை உயர்ந்த மீனை தேடாமல் சின்ன வகை மீன்களை உணவில் சேர்த்து பயன் பெறும்..!
a>