மிகப் பெரிய பாம்பை கழுத்தில் போட்டபடி போட்டோ ஷூட் செய்த நடிகை யாஷிகா. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் பீதியில் உறைந்த யாஷிகா..இதோ வீடியோ.!!
பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறியவர் நடிகை யாஷிகா. யாஷிகா ஆனந்த் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட அவரை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அறிமுகப் படுத்திய திரைபடம் என்றால் அது “இருட்டு அறையில் முரட்டு” குத்து திரைப்படம் தான்.
இதில் இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசி நடித்த யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மஹத்துடன் காதல், அத்துமீறல் என சர்ச்சைகள் வந்தாலும் சிறந்த போட்டியாளர் என கொண்டாடப் பட்டார்.
வெளியே வந்த பின் திரைப்படங்கள், போட்டோ ஷூட் என பிஸியாக இருந்த யாஷிகா அண்மையில் விபத்தில் சிக்கி 3 மாத காலம் படுக்கையில் இருந்தார். தற்போது குணமாகி உள்ள அவர் திரைப்படங்கள் போட்டோ ஷூட்களில் பிஸியாகி விட்டார்.
அண்மையில் மிகப் பெரிய பாம்பை கழுத்தில் போட்ட படி போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென பாம்பு யாஷிகாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் அதிர்ந்து போயுள்ளார் யாஷிகா, இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.!