நடிகை யாஷிகாவினால் பறிபோன அப்பாவி உயிர்.! இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்.!!
நேற்றைக்கு முன்தினம் மாமல்லபுரம் சூளேரிக்காடு கிழக்கு கடற்கரைச் சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் நடிகை யாஷிகா உட்பட அவரது தோழிகள் சிலர் காயமடைந்ததுடன் ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மரணமடைந்த பவானி என்ற யாஷிகாவின் தோழியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. மிக வேகமாக வந்த கார் வேகக் கட்டுப் பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,
விபத்தில் சிக்கியவர்கள் கதறிய சத்தம் கேட்டு ஒன்று கூடிய மக்கள் அவர்களை வைத்தியசாலையில் சேர்த்த போது பவானி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து அதிக போதையில் இவர்கள் கார் ஓட்டியதால் நிகழ்ந்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது, இது ஒரு பக்கம் இருக்க விபத்தில் உயிரிழந்த பவானி என்பவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யஷிகாவின் நண்பர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். யாஷிகா இத்துடன் பலமுறை விபத்தில் சிக்கி உள்ளார். ஏற்கனவே 2 முறை விபத்தில் சிக்கி மீண்ட இவர் இது மூன்றாவது முறை என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.!!