நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் சென்னையில் விபத்து..! தற்போது வெளியாகியுள்ள தகவல்..!!
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பேசப் பட்டார். திரைப்படம் சர்ச்சைகளை சந்தித்த போதும் இளைஞர்களிடம் அதிகம் பேசப் பட்டது. அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்ட யாஷிகா சிறந்த போட்டியாளராக இருந்தார்.
வெற்று பெறுவார் என எதிர்பார்க்கப் பட்ட யாஷிகா பைனல் கூட செல்லாமல் வெளியேற்றப் பட்டார். வெளியே வந்தவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது யோகி பாபுவுடன் அவர் நடித்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றது. அதே போல் மஹத்துடன் அவர் நடித்த திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கின்றது.
இப்படி இருக்கையில் நேற்றைய தினம் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்க்டன் சாலையில் நேற்று நள்ளிரவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உணவு டெலிவரி செய்யும் பரத் என்ற இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபர் வீதியோரத்தில் நின்ற உணவு டெலிவரி வாகனத்தில் மோதியுள்ளது. இதில் யாஷிகா மற்றும் சிலர் இருந்துள்ளனர். அனைவரும் போதையில் இருந்த நிலையில் யாஷிகா வேறு காரில் ஏறி சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய யாஷிகாவின் நண்பர்களை பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..!