பிக் பாஸ் வீட்டில் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற மதுமிதாவின் தற்போதைய நிலை இது தான்..!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சனிக்கிழமை வெளியேற்றப் பட்டவர் மதுமிதா. தனது கையை அறுத்துக் கொண்ட காரணத்தால் வெளியேற்றப் பட்டதாக செய்திகள் வெளியானது. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே டாஸ்காக இருந்தாலும் பேசுவதாக இருந்தாலும் எதையும் தில்லாக செய்துவந்த மதுமிதா
வீட்டிற்குள் மீண்டும் வந்த வனிதாவின் சூழ்ச்சியில் மாட்டுப் பட்டு தேவையற்ற விடயங்களுக்கு சண்டை போட தொடங்கினார். பின்பு கோபத்தின் உச்சத்திற்கு சென்று தனது கையை அறுத்துக் கொண்டார். ஆரம்பத்தில் இது ஏமாற்றும் வேலை என பலர் கூறினாலும் வெளியே வந்த மதுமிதாவின் கையில் காயம் பெரிதாக இருப்பதாக பிக் பாஸ் 1 போட்டியாளர் டேனியல் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மதுமிதா இரண்டு நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. கை வீக்கமும் வலியும் இருந்ததால் சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் ஒப்பந்தத்தின் காரணமாக எதையும் கூற முடியாது எனவும் இன்னும் தான் முழுமையாக குணமடையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.