முடிந்து போகாத லொஸ்லியா கவின் காதல்..! வெளியாகி உள்ள தகவலால் மகிழ்ச்சியில் கவ்லியா ஆர்மி..!!
பிக் பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சியாக இருந்தவர் லொஸ்லியா. இலங்கையில் இருந்து இந்தியா சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இலங்கை தமிழர்கள் மட்டும் இன்றி தமிழ்நாட்டு தமிழர்களையும் தன் பக்கம். கவர்ந்தார். கவினுடனான காதலை சிலர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்தியாவை சேர்ந்த பலர் ஏற்றுக் கொண்டனர் லொஸ்லியா பைனல் வர உதவியதே கவின் ரசிகர்களின் வாக்கு தான்.
இருப்பினும் கடந்த சில நாட்களாக கவின் லொஸ்லியா பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. காரணம் இருவரும் பேசிக்கொள்ளவோ புகைப்படம் எடுத்துக் கொள்ளவோ இல்லை. இந்த நிலையில் தற்போது செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
இதில் கவின் லொஸ்லியா இருவரும் பிரியவில்லை என்றும் இருவரும் போனில் பேசிக் கொள்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதனை அபிராமி மலேசியாவில் வைத்து தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கவினும் பிரச்சனையில் இருக்கிறார், அதே போல் லொஸ்லியாவின் அம்மாவிற்கும் காதலில் விருப்பம் இல்லை, அதனால் பெற்றவர்களின் சம்மதத்துடன்.. திருமணம் செய்வதென முடிவெடுத்துள்ளனராம்..!! நல்ல முடிவு தான்..!!