இங்கு நிர்வாணமாகவும் “கற்புக்கரசி”கள் இருக்கின்றனர்..! மதுமிதாவை அலற வைத்த அபிராமி..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கைகளை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததால் வெளியேற்றப் பட்டவர் மதுமிதா. வெளியே வந்தவர் மீரா மிதுன் போல் யாரையாவது குறைகூறிக்கொண்டே இருக்கிறார். மதுமிதா அமைதியாக இருந்தாலும் அவரது கணவர் தூண்டிவிட்டுக் கொண்டிருகின்றார் என்றே சொல்லவேண்டும். மதுமிதா சிறந்த போட்டியாளர் மட்டும் இன்றி எல்லோருக்கும் பிடித்தவராகவும் இருந்தவர்.
பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப் பட்டவர். ஆனால் வீட்டிற்குள் ஏற்பட்ட சின்ன சின்ன விடயங்களால். இந்த நிலையில் வீட்டிற்குள் தமிழ் பெண்களின் ஆடைகள் தொடர்பாக பிரச்சனைகள் வந்ததை நாம் அறிவோம் இதில் மதுமிதா அபிராமியை திட்டி இருந்தார்.
இதனால் தற்போது வரை மதுமிதாவின் ரசிகர்கள் அபிராமியை கலாய்த்து வருகின்றனர். அண்மையில் கூட மதுமிதா தமிழ் கலாச்சாரம் கெட்டு போவதற்கும் கற்பழிப்புகளுக்கும் ஆடைகளே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
இது இப்படி இருக்க அபிராமியிடம் பலர் மதுமிதா தான் பத்தினி நீங்கள் விலை மாது என்ற ரீதியில் பேசிவருகின்றனராம். இதனால் அபிராமி பதிவொன்றை இட்டுள்ளார். அதில் இங்கு ஆடைகளில் எதையும் கணிக்காதீர்கள்.நிர்வாணமாக இருப்பவர்கள் கூட கற்புக்கரசியாக இருக்கின்றனர்.
ஆடைகளில் இல்லை அடக்கம் இருக்கிறது எங்கள் மனதில் தான் அவை இருக்கிறது. உங்கள் பார்வையை மாற்றுங்கள் பத்தினி என்பது புனிதமான சொல் அதனால் நான் மதிக்கிறேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை என பதிவிட்டுள்ளார்.!!