மதுமிதா கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது.!? அனைத்தையும் உளறிய நடிகை அபிராமி…
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை நடிகை அபிராமி வெளியேறினார். இரண்டு வாரங்களாக குறைந்த வாக்குகளில் இருந்த அபிராமி கடந்த வாரம் வெளியேறினார். அவரது முதல் வேலையாக இருந்தது அவர் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை பார்ப்பது தான்.
திரைப்படத்திற்கும் அபிராமிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இன்று ரசிகர்களிடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அபிராமி வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதாவிற்கு என்ன நடந்தது என கேட்டதற்கு மதுமிதா கடந்த சில நாட்களாக வேறு விதமாக நடந்துகொண்டார்.
வீட்டில் உள்ள ஆண்களிடம் தவறாக நடந்துகொள்ள ஆரம்பித்தார், அதாவது ஆண்களை பிடிக்காதது போல் இருந்தார்.இதனால் வீட்டிற்குள் பிரச்சனை அதிகரித்ததே தவிர குறையவில்லை. பசங்க கூட சண்டை போட்டு தான் தவறான முடிவை மது எடுத்தார். நானும் கஸ்தூரியும் தான் பிக் பாஸிடம் மதுவை அழைத்துச் சென்றோம்.
அங்கு நடந்தவை எல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் அன்று நடந்தது ஒரு மோசமான விடயம். இதில் வேறு யாருடைய தவறும் இல்லை. அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டியது மது மட்டுமே. தவறு முழுவதும் மதுமிதா செய்தது தான் என அபிராமி மேலும் தெரிவித்துள்ளார்..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.