நடிகர் நாகார்ஜூனா வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் அடையாளம் காணபட்டது..! இதோ இவருடையது தான்…!
நேற்றைய தினம் தெலுங்கானாவில் இருக்கும் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப் பட்டது. நாகார்ஜூனாவிற்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் சென்ற போது தூர் நாற்றம் வீசியதை தொடர்ந்து சென்று பார்த்தவர்களுக்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்றை கண்டு அதிர்ந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர். தற்போது குறித்த சடலம் யாருடையது என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 30 வயதான சக்காலி பாண்டு என்பவரின் சடலமே இது என உறுதி படுத்தியுள்ளனர்.
இது குறித்த அவரது பெற்றோர் கூறுகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்காலியின் சகோதரி இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து கவலையில் சக்காலி இருந்தார் . ஒருநாள் தக்கொலை செய்துகொண்டு இறக்கப் போவதாகவும் இந்த மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
சடலமோ அவர் பற்றி தகவலோ இல்லாததால் எங்கோ சென்று விட்டார் கவலை குறைந்ததும் வருவார் என நினைத்து பொலீஸாருக்கும் கூறவில்லை ஆனால் இப்போது தான் அவர் நிஜத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ பொலீஸார் இது கொலையா தற்கொலையா என இன்னும் உறுதி படுத்தவில்லை..!!