ஏற்கனவே திருமணமானதை மறைத்து நடிகர் பிரசாந்தை ஏமாற்றிய பெண்.!! திருமணத்தை வெறுத்து தனிமையில் பிரசாந்த் வாழ இந்த பெண் தான் காரணமாம்.!!
ஏற்கனவே பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து பிரிந்த பின் நடிகர் பிரசாந்தை அவரது மனைவி ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட விடயம் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. 2005ம் ஆண்டு நடிகர் பிரசாந்திற்கு கிரகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. திருமணமாகி ஒரு வருடத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டார் நடிகர் பிரசாந்த்.
ஆனால் கிரகலட்சுமியோ பிரசாந்த் குடும்பம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும், வாழ விடாமல் வன்கொடுமை செய்வதாகவும் நீதி மன்றத்தில் கூற 2009ம் ஆண்டு வரை இந்த வழக்கு இழுபட்டது. பின்னர் பிரசாந்திற்கும் கிரகலட்சுமிக்கும் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் பிரசாந்த் உண்மையாக கிரகலட்சுமியை பிரிந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரசாந்தை திருமணம் செய்வதற்கு முன்னரே கிரகலட்சுமி பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து பிரிந்துள்ளார். பிரசாந்தை விட வயதில் மூத்தவரான இவர் பின்னர் பிரசாந்தை திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது காதலித்த பிரசாந்தையே திருமணம் செய்துகொண்டாயே என பலர் கூறிய போது மனைவி மீது சந்தேகப் பட்ட பிரசாந்த் மனைவி பற்றி தேடி பார்த்த போது அவர் பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து பிரிந்தது தெரியவந்துள்ளது.
தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் விவாகரத்து கேட்ட போது வரதட்சணை கொடுமை என கிரகலட்சுமி கதையை மாற்றி இருந்தார். இதன் பின் மனைவி பற்றிய விடயங்களை நீதி மன்றத்தில் சமர்பிக்க பிரசாந்தால் முடியவில்லை, இதனால் வழக்கு 4 வருடங்கள் நீண்டது. அதற்குள் கிரகலட்சுமி மீண்டும் தனது முன்னாள் கணவரான பிரசாந்துடன் சேர்ந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் பிரசாந்த் இனி திருமணம் வேண்டாம் என கூறியதுடன் ஒரு ஏமாற்றமே தாங்க முடியவில்லை என கூறிவிட்டார். ஒரு காலத்தில் ரசிகைகளின் கனவு காதலனான பிரசாந்திற்கா இந்த நிலை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.!!