நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகனும், ரசிகர் மன்றத் தலைவருமான் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை..! புதுச்சேரியில் கொடூர சம்பவம்..!!
நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகரும், புதுச்சேரி ரசிகர் மன்றத் தலைவருமான 37 வயதான மணி என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியில் வசித்து வருபவர் மணி என்ற மணிகண்டன். பெயிண்டராக பணி புரிந்து வரும் மணிகண்டனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவ தினத்தன்று மனைவி குழந்தையோடு மனைவியின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த மணி கண்டனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மனைவி யார் என்று கேட்ட போது இருங்கள் வெளியே சென்று வருகின்றேன், என சென்றுள்ளார்.
அலைபேசியில் அழைத்த நபரை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மணிகண்டனை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் மணியை கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர், இந்த சம்பவம் தொடர்பாக பொலீஸாருக்கு அறிவிக்கப் பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் உயிருக்கு போராடிய மணியை அருகில் உள்ள புதுச்சேரி அரச மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழ்ந்தார்.
யாரோடும் முன் பகை இல்லாத மணி திரைப்படங்கள் விடயத்தில் மட்டும் சண்டையிட்டு வந்துள்ளார். அதனால் கொல்லப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.!!