தனுஷுடனான விவாகரத்தின் பின் ஐஸ்வர்யா எடுத்துள்ள அதிரடி முடிவு.! அவசர முடிவு என விமர்சிக்கும் ரசிகர்கள்!!
இணைவார்களா பிரிவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடமும் குடும்பத்தினரிடமும் குழப்பத்தில் உள்ள நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இது பற்றிய எந்த ஒரு குழப்பமும் இன்றி தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். தனுஷ் இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா புது வேலை திட்டங்களில் பிஸியாக இருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் அடுத்த வேலைத் திட்டம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று பாடல் வெளியிடுவதாக உள்ளது. காதலர் தினத்திற்காக குறித்த பாடலில் பிரபல நடிகரின் மகள் ஒருவர் நடிக்கிறார், அத்துடன் புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். இந்த பாடலின் ஷூட்டிங் ஹைத்திராபாத்தில் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க விவாகரத்தின் பின் ஐஸ்வர்யா சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். புதிய திரைப்படம் ஒன்றினை தயாரித்து இயக்கவுள்ள ஐஸ்வர்யா அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். கணவரை வைத்து திரைப்படங்கள் தயாரித்த ஐஸ்வர்யா அடுத்து முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
விவாகரத்தின் பின்னான ஐஸ்வர்யாவின் அதிரடி முடிவுகள் வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனையாக உள்ளது, ஆனால் இந்த முடிவுகள் அவசர முடிவுகள் என சிலர் கூறி வருகின்றனர்.!