உடலில் ஒட்டிமொத்த இடத்திலும் தல அஜித்தின் பெயரை பச்சை குத்திக் கொண்ட தீவிர ரசிகர் தற்கொலை.! காரணம் இது தானாம்.!!
பிரபல நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான “தல பிரகாஷ்” என்பவர் நேற்றைய தினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கூறி இருக்கும் ஒன்றானது ” எனக்கு ரசிகர் மன்றம், கட் அவுட், பால் அபிஷேகம், எதுவும் செய்யாதீர்கள், உங்களை நான் இலவசமாக சந்தோஷப் படுத்தவில்லை, பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறேன், இது என் உழைப்பு, நான் சம்பாதிக்கிறேன் அவ்வளவு தான், அதனால் நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள், பணம் இருந்தால் என் படத்தை பாருங்கள்” இது தான்.
இப்படி சொல்லியதாலோ என்னவோ அவருக்கென்று தீவிர ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் தல பிரகாஷ். இவர் தனது உடலில் அனைத்து இடங்களிலும் அஜித் பெயரை பச்சை குத்தியுள்ளார், அஜித் மீது வெறித் தனமான அன்பு கொண்டவர், இவர் யாரும் எதிர் பாராத நிலையில் தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது தற்கொலைக்கான காரணம் காதல் என்று சொல்லப் படுகின்றது. காதலித்த பெண் சில மாதங்களாக பிரகாஷுடன் பேசாமல் இருந்ததுடன் உறவை முறித்துக் கொள்ள கூறியதால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பிரகாஷின் நண்பர்கள் தல அஜித் மரண சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் குடும்பத்தை கவனிக்காத இளைஞரை அஜித்திற்கு பிடிக்காது, நிச்சயம் பிரகாஷின் முடிவு அஜித்திற்கு கோபத்தையே ஏற்படுத்தும்.!!