ஒரு கிலோ “கோதுமை மா”வை உதவியாக வழங்கிய அமீர் கான் .! அதை வாங்கிய ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! வீடியோ வெளியிட்ட இளைஞர்..!!
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இது தொடர்பாக அமீர்கான் தரப்பில் எதுவும் கூறவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்..!
வலது கையால் உதவுவது இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள், ஆனால் இன்று மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே உதவுகின்றனர். இதில் இருந்து விடுபட்டு ஏழைகளுக்கு வித்தியாசமாக உதவியுள்ளார் நடிகர் அமீர் கான், சினிமாவில் சூப்பர் ஹீரோவான அமீர் கானின் நிஜ வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகள் உள்ளன, இருப்பினும் ரசிகர்கள் குறையவில்லை.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடைசட்டம் போடப் பட்டுள்ளது, இதனால் அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைகளின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு அன்றாட உணவு கேள்விக் குறியாகி உள்ளது. இவர்களுக்கு உதவும் விதத்தில் மிகவும் காஷ்டப் படும் கிராமம் ஒன்றுக்கு இரண்டு லொரிகளில் ஒரு குடும்பத்திற்கு 1 கிலோ என்ற ரீதியில் மா பொதிகளை அமீர் கான் அனுப்பி வைத்துள்ளார்.
நள்ளிரவில் குறித்த லொரிகள் கிராமத்திற்குள் சென்றுள்ளது. அங்கு அமீர் கான் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ மா கொடுக்கிறார் என்று அறிவிக்கப் பட்டது. ஓரளவு பணம் மற்றும் பொருட்கள் இருப்பவர்கள் ஒரு கிலோ மாவிற்காக போக தேவையில்லை என வீட்டில் இருக்க அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப் படும் ஏழைகள் அனைவரும் சென்றுள்ளனர்.
அனைவருக்கும் ஒரு கிலோ மா பொதிகள் வழங்கப் பட்டுள்ளது. நள்ளிரவு என்பதால் மக்கள் பொதிகளை பிரிக்கவில்லை. அடுத்த நாள் காலையில் மா பொதிகளை பிரித்த போது அதில் ஒரு குடும்பத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் இருந்துள்ளது. இந்த செய்திகள் வைரலாக மா பொதிகள ஏற்றிச் சென்ற இளைஞர்களே ஷாக்காகி உள்ளனர் காரணம் அவர்களுக்கு கூட பொதியில் பணம் இருப்பது தெரியாது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இதனை இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.