அமெரிக்காவில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை..! காரணம் இது தானாம்..!
ஆரம்பத்தில் கொண்டாடப் படும் நடிகைகள் திடீரென காணாமல் போவது வழமையான ஒன்று தான். அப்படி காணாமல் போனவர் தான் நடிகை ஜெயஸ்ரீ. மோகன் உட்பட சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெயஸ்ரீ. இவர் நடித்த தென்றலே என்னைத் தொடு, நீண்ட நாட்கள் ஓடி ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.
அதே போல் விடிஞ்சா கல்யாணம், திரைப்படமும் மக்களால் அதிகம் கொண்டாடப் பட்டது. இவரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே திருமணம் முடிந்து இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் செட்டிலானார். இவருக்கு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜெயஸ்ரீ பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ஜெயஸ்ரீ அமெரிக்காவில் அரசு நடத்திவரும் ஆதரவற்றோர் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இங்கு சமைப்பது, சாப்பாட்டு கோப்பை கழுவுவது உட்பட பல வேலைகளை செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது என் மகிழ்ச்சிக்காக செய்கிறேன், பணத்திற்காக பணி புரிவதை விட சமையல் செய்வது, சாப்பாட்டு கோப்பை எடுப்பது போன்றவை மன நிறைவை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்..!!