நீண்ட நாட்களின் பின் சந்தித்துக் கொண்ட இரு துருவங்கள் .! மகிழ்சியான செய்தி சீக்கிரமே .!!
இசையின் ராஜாவும் இயக்கத்தின் ராஜாவும் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்னைய காலத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியான அத்தனை படங்களும் வெற்றி வாகை சூடின.
அத்துடன் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது.பின்னரான காலத்தில் இரண்டு ராஜாக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பினால் இருவரும் பிரிந்து கொண்டனர். பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் முடியாமல் போயிருந்தன.
இந்நிலையில் பல வருடங்களின் பின்னர் இருவரதும் சொந்த ஊரான தேனியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளார்கள்.இதனை இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ‘இயலும்,இசையும், இணைந்தது ..இதயம் என் இதயத்தை தொட்டது.என் தேனியில்.’