இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் படுபவர் யார்? வெளியேற்றப் படுவது யார்.!? இதோ..!!
பிக் பாஸ் வீட்டில் இன்று என்ன நடக்கப் போகிறது என்பது தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் ஏற்கனவே வீட்டிற்குள் விருந்தினராக சென்ற சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா, ஆகியோர் வெளியேற்றப் படுகின்றனர். இதில் சாக்ஷியிடம் வீட்டில் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.
அதனை தொடர்ந்து மக்களை சாக்சி நாய் என்றது தொடர்பாக கேள்வி கேட்கப் படுகின்றது. அதன் பின் தான் செய்தது தவறு என்பதை ஏற்றுக் கொண்ட சாக்ஷி மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன் பின் வழமை போல் வனிதாவிடம் பேச்சை ஆரம்பிக்கும் கமலஹாசன் வனிதாவை வறுத்து எடுத்து விடுகிறார்.
செரின் தர்சன் பிரச்சனை பெரிதானதால் தான் வனிதாவிற்கு இந்த வறுவல் பொரியல் எல்லாம். அதன் பின் யார் காப்பாற்றப் படுவார்கள் என கொஞ்ச நேரம் இழுத்து பின் நாளை என நிகழ்ச்சி முடிக்கப் படுகிறது. நாளை வரை காத்திருங்கள் என வழமை போல் கூறினாலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப் பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேரன் அல்லது செரின் என்றிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வார நாமினேசனில் வனிதா எவிக்ட் ஆகி ரகசிய அறை செல்வார். பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வருவார். நேரடி டாஸ்க்கில் வெற்றி பெற்று பைனல் செல்வார் என ஏற்கனவே நம் இணையத்தில் பதிவிட்டிருந்தோம் அது தான் தற்போது உண்மையாகி உள்ளது..!
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.