பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே வெளியே காதல் லீலைகளில் ஈடுபட்ட அபினய்.! மனைவி குழந்தை இருக்கும் போதே இப்படி செய்தாரா.? அபினயின் முகத்திரையை கிழித்த பவ்னி.!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே பவ்னியிடம் அபினய் காதல் சேட்டை செய்ததை வெளிப்படையாக பேசி அபினய்யின் முகத் திரையை கிழித்துள்ளார் நடிகை பவ்னி ரெட்டி. பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டுள்ள பவ்னி மற்றும் அபினய் நல்ல நண்பர்களாக இருந்தனர். இது பின்னர் வேறு காதலாக மாறுவதாக போட்டியாளர்கள் இடையே பேசப் பட்டது,
கடந்த வாரம் இந்த விடயம் கமலஹாசன் வரை வந்தது, பவ்னி ரெட்டி பேசிய குறும்படத்தை போட்டுக் காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்திய கமலஹாசன் சிறு எச்சரிக்கையையும் விடுத்தார், இந்த பிரச்சனை ஓரளவு முடிந்த நிலையில் பவ்னி மற்றும் அபினய் பேசிக் கொண்டிருந்தனர். இதன் போது பவ்னி நீ என் நல்ல நண்பன் என்று தான் வெளியே இருக்கும் போது பழகினேன்,
ஆனால் நீ வெளியே இருக்கும் போதே இன்ஸ்ட்டாகிராமில் என் அத்தனை பதிவுகளுக்கும் கமெண்ட் செய்வாய், அத்துடன் என் மேல் ஈர்ப்பு போல் பேசுவாய், உனக்கு நினைவு இருக்கிறதா நீ எழுதிய கடிதம். அது இப்போதும் என்னிடம் இருக்கிறது,
அந்த கடிதத்தில் “உன்னை மிகவும் பிடிக்கும், உன்னை பிடித்ததால் தான் கொமெண்ட் செய்கிறேன், நீ அழகாக இருக்கிறாய், உன்னோடு பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுகின்றேன் என நீ எழுதியது இருக்கிறது, ஆரம்பத்தில் வெறுப்பாக இருந்தது, இங்கு வந்த பின் நீ பேச பிடித்து போனது, ஆனால் நீ என்னோடு வேறு மாதிரியும் சக போட்டியாளர்கள் முன் வேறு மாதிரியும் நடிக்கிறாய் என கூறினார்.
அதற்கு அபினய் உன்னிடம் இது வரை அத்துமீறி இருக்கிறேனா என கேட்டார், இதற்கு பதில் கூறிய பவ்னி வெளியே இருக்கும் போது நீ அத்து மீறி தான் பேசினாய், வீட்டிற்குள் கேமரா இல்லாவிட்டால் ஒரு மாதிரி என கூறி எழுந்து சென்றார்.
ஆனால் அபினய் விடுவதாக இல்லை, நாம் அமைதியாக பேசி முடிவு எடுக்கலாம் என பவ்னியின் பின் செல்கிறார். அபினய் ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் வெளியே இருக்கும் போதே தாத்தாவை போல் காதல் லீலைகள் செய்துள்ளார் என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.!