பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடி வெளியேற்றமும், அதிர்ச்சி வைல்ட் கார்ட் வரவும்.! 50வது நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழும் மாற்றம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்று 50 நாட்கள் ஆகின்றது, இந்த 50 நாட்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ரசிகர்களால் அடையாளம் காண முடியாமல் உள்ளது. எல்லோரும் ஒரே மாதிரி சில நாட்கள் நல்லவர், சில நாட்கள் கெட்டவர் அவ்வளவு தான். கடந்த சீசன்களில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் முடிந்தாலே வெற்றியாளரை கணிப்பிட்டு விடும் ரசிகர்கள் இந்த சீசனில் விஜய் டிவியால் தேர்வு செய்யப் படுபவரே வெற்றியாளர், மக்களின் வாக்குகள் தேவையற்றது என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்றில் இருந்து நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றைய தினம் எவிக்ஷன் நாளாகும் . கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இருக்கவில்லை, ஆனால் இந்த வாரம் கட்டாயம் ஒருவர் வெளியேற்ற பட வேண்டும். இன்றைய சூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் வீட்டை விட்டு சுசித்ரா வெளியேற்றப் பட்டுவிட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போதே பாலாஜியின் மீது காதலோடு வந்த சுசித்ராவிற்கு பாலாஜியின் காதல் கிடைக்கவில்லை. இதனால் கடுப்பான இவர் பாலாஜி மீது கோபத்தில் இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜி வெளியேறுவது இன்று காட்டப் படும். சுஜி வெளியேறும் போது இன்னுமொருவர் வீட்டிற்குள் வருகிறார். வீட்டிற்குள் இருக்கும் ஷிவானியின் முன்னாள் காதலரான அஸீம்.
வெளியே இருக்கும் போதே பாலாஜிக்கு எதிராக போஸ்ட் போட்டு வந்த அஸீம் வீட்டிற்குள் சென்றதும் கண்டிப்பாக பாலாஜியும் சண்டை போடுவார், அத்துடன் போட்டிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. சுசித்ராவின் வெளியேற்றமும் அஸீமின் வரவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.!