இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் திரைப்படம் இல்லை
அட்லியின் இயக்கத்தி தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடி 10 வருடங்களுக்கு இன் சேர்ந்துள்ள திரைப்படம் “பிகில்” இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் 25ம் திகதி திரைக்கு வர உள்ள நிலையில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பொதுவாக விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சையை ஆரம்பித்துவிடுவார்கள்.
இம்முறை சர்ச்சைகளை கடந்து வந்தாலும் பல திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தை வாங்குவதில் தாமதம் செய்கின்றனர். காரணம் பிகில் திரைப்படத்தை வெளியிட விரும்பும் தியேட்டர்காரர்களிடம் திரைப்படத்திற்கு அதிகமான தொகை கேட்பதே என திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜயின் திரைப்படம் ஒரு திரையரங்கத்தில் கூட திரையிடப் போவதில்லையாம். இதனை கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்துள்ளனராம். இதற்கான காரணமும் அதிக விலை தானாம்.
அதிக விலைகொடுத்து வாங்கி விஜய் திரைப்படங்களால் நஷ்டத்தை சந்திப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கரூர் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது இப்படி இருக்கையில் பிகில் திரைப்படத்திற்கான டிக்கெட்டின் விலையை சில தியேட்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்..!!