பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் முதல் சண்டையை ஆரம்பித்த நடிகர்.! சமாளித்து சிரித்து முடித்து வைத்த பெண் போட்டியாளர்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 2 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஒவ்வொருவரின் உண்மை முகமும் தெரியவர ஆரம்பித்துள்ளது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் தற்போது மக்களின் மனம் கவர்ந்தவராக நடிகை பவ்னி ரெட்டி. திருமணமாகி கணவர் இறந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் உண்மையாக பழகுகிறார்,
தனது வயதை கூறியதுடன் தனது வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாக பேசுகிறார். இதனாலையோ என்னவோ பவ்னி ரெட்டிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதே போல் இசைவாணிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். குளியறையில். எதில் சுடு நீர் வரும், எந்த சவரில் குளிர் நீர் வரும் என தெரியாமல் அவர் இமான் அண்ணாச்சியிடம் கேட்பதும் ரசிகர்கள் மனதை இளக வைத்துள்ளது,
இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிரூப் அனைவருடனும் ஒத்துப் போவதும் பெண்களுக்கு முதலிடம் கொடுக்க விரும்புவதும் அனைவருக்கும் பிடித்துப் போகிறது, ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ராஜு கொஞ்சம் அதிகம் செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இன்றைய தினம் சின்னப் பொண்ணு தனது கஷ்டத்தை கூறிய போது இப்படி எல்லாம் கூறிக்கொண்டிருப்பது தவறு என கூறி அவருக்கு unlike கொடுத்தார்.
இதனை பார்த்த பலரும் ராஜு செய்த இந்த செயல் பலரையும் கடுப்பாக்கியுள்ளது. மற்றைய சீசன்களை விட இந்த சீசனின் ஆரம்பம் ரசிக்க கூடியதாக இல்லாவிட்டாலும் எதிர்வரும் நாட்களில் ரசிக்க முடியும் என கூறுகின்றனர் ரசிகர்கள். மோதல் என ஆரம்பித்தால் நிச்சயம் அது ராஜுவால் இருக்கலாம், இன்று தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்ப்பதாக நினைத்து சீண்டிய போது மோதல் வெடிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் பிரியங்கா சமாளித்து விட்டார். பொறுத்து இருந்து பார்க்கலாம்.!!