பிக் பாஸ் சீசன் 3ல் காதல் ஆரம்பம்..!! இரவு நள்ளிரவு 12. 30 க்கு தன் காதலை சொன்ன பிரபல நடிகை..!
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் இருக்க தானே வேண்டும். பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியா ஆரவ் காதல் , எல்லோரும் ஓரம்கட்டிய ஓவியாவின் மீது அதிக அன்பு காட்டிய ஆரவை ஓவியாவிற்கு பிடித்து போக அவரை காதலிக்க தொடங்கினார்.
தன் காதலை ஆரவ்விடம் சொன்ன போது ஆரவ் ஏற்றுக் கொள்ளவில்லை, இதனால் மனமுடைந்த ஓவியா தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸ் மீறிய செயல் என்பதால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா.
அதே போல் சீசன் இரண்டில் முதலில் ஐஸ்வர்யா ஷாரிக் காதல் ஆரம்பமானது. ஆனால் ஷாரிக் வெளியே வேறு காதல் இருப்பதால் விலகினார். அதனை தொடர்ந்து யாஷிகா மஹத் காதல் ஆரம்பமானது. மஹத்திற்கு காதலி வெளியே இருந்த போதும் யாஷிகாவுடன் நெருங்கி பழகினார்.
பின் ரசிகர்களால் வெறுக்கப் பட்டு வெளியேற்றப் பட்டார். சீசன் மூன்றில் யார் யாரை காதலிப்பார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில் நேர்கொண்ட பார்வை அபிராமி காதலில் விழுந்துள்ளார். அதுவும் சரவணன் மீனாட்சி புகழ் கவினின் காதலில். இன்று தன் காதல் பற்றி ஷெரினிடம் அபிராமி சொல்லிவிட்டார்.
இனி வரும் காலங்களில் இவர்களின் காதல் லீலைகளை பார்க்கலாம். லூசியா & ஷாக்ஷி இருவரும் இருக்கிறார்கள் அதே போல் தர்ஷன் & முகேன் இருகின்றார்கள். பார்க்கலாம் இம்முறை பிக் பாஸ் வீட்டுக்குள் எத்தனை காதல் ஜோடிகள் உருவாகின்றனர் என்று.!!