மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன் தாய் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய சித்ரா.! மகளின் இறுதி வீடியோவை பார்த்து கதறும் தந்தை..!!
சித்து மரணமடைந்து ஒரு வாரத்தை கடந்துவிட்ட போதும் இன்னும் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. என்ன தான் தற்கொலை என பொலீஸாரும், வைத்தியர்களும் கூறினாலும் உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் சித்துவின் நினைவுகளால் அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் தவித்து வருகின்றனர்.
அம்மா அப்பா இருவரும் கஷ்ட பட கூடாது என்பதற்காக சித்ரா மிகவும் கஷடப் பட்டார். தாய் தந்தைக்கு நிரந்தர வீடு, வாகனம் என அனைத்தையும் வாங்கி கொடுத்தார். அதே போல் சித்துவின் தாய் தந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு திருமணம் பெரிதாக இடம்பெற வில்லை. சித்துவின் அம்மாவிற்கு இந்த ஆசை இருந்துள்ளது,
அதனால் தாய் தந்தைக்கு பெரியாமலே 60வது திருமணத்தை சித்து ஏற்பாடு செய்ததுடன் மிகப் பிரமாண்டமான முறையில் செய்து வைத்தார். இதன் போது எடுக்கப் பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்த சித்து அம்மா அப்பா திருமணம் செய்ய ஆசை பட்டார்கள், செய்து வைத்துவிட்டேன் எனக்கல்ல அவர்களுக்கு என்று கூறி இருந்தார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது, யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்துகொண்ட உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டேனே மகளே என சித்துவின் தந்தை வீடியோவை பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் நிலையில் சித்துவின் நண்பர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.!