கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தில் இருந்த தாய் தந்தையை காப்பாற்றிய சம்யுக்தாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை.! நலம் பெற பிரார்த்திக்கும் ரசிகர்கள்.!!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்கள் உறவுகளை காப்பாற்ற ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களை மிகவும் அவதானமாக கவனித்துக் கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதனால் பலரும் தங்கள் தாய் தந்தையரை கொரோனாவில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
அப்படி பாதுகாக்கும் போதே சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுகின்றது, அண்மையில் பிரபல நடிகையான சம்யுக்தா ஹக்டேயின் தாய் தந்தை இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரையும் காப்பாற்ற ஒரு சில மருத்துவ உதவி தேவை என தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தா ஹக்டே பதிவிட்டிருந்தார்.
அவருக்கு உதவிகள் கிடைத்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த பெற்றோர்கள் தற்போது ஓரளவு குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தாய் தந்தைக்காக கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த சம்யுக்தவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கால தாமதம் செய்யாமல் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
அதன் போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்யுக்தா தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இது பற்றி பதிவொன்றை இட்டுள்ள அவர் அனைவரும் கவனமாக இருங்கள் உங்களுக்கு பிரியமானவர்களை இழந்துவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.!!
உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us ??????
Click Here to Download Android app????
Click Here To Download IOS App????