ஊரடங்கு சட்ட நேரத்தில் விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி டிடி. ! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்..!!
முன்னணி தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்கிற திவ்யதர்சினி விபத்தில் சிக்கிய விடயம் ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது. சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் அளவிற்கு கொண்டாடப் படுபவர் தொகுப்பாளினி டிடி.
திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து பெற்ற டிடி அதன் பின் சில நாட்கள் தொலைகாட்சியில் தலைகாட்டாமல் இருந்தார், மீண்டும் தொலைகாட்சிக்கு வந்த டிடி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் 144 தடைசட்டம் போடப் பட்டுள்ள நிலையில் டிடி விபத்தில் சிக்கியுள்ளார்.
இதனை டிடியே பதிவிட்டுள்ளார். ஊரடங்கு சட்ட நேரத்தில் காலை உடைத்து கொண்டேன் என கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் காலில் பெண்டேஜ் போடப் பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னாச்சி என கேட்டு வருகின்றனர். அண்மை காலமாக டிடி பற்றிய செய்திகள் அதிகம் வைரலாகி வருகிறது..!!