பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மருமகன் மீது பரபரப்பு பாலியல் புகார் ! அதிரும் தமிழ் சினிமா.! திருமணமாகி 3 மாதத்திலேயே இப்படியா.!?
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடப் படும் இயக்குனர் சங்கரின் மருமகன் மீது பாலியல் புகார் பதியப் பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இயக்குனர் சங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருடன் மிக பிரமாண்ட முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்தின் பின் ஐஸ்வர்யா கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்றைய தினம் ரோஹித் மீது பரபரப்பு புகார் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது, 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் தொல்லை செய்த புகாரில் ரோஹித்தும் சம்மந்தப் பட்டுள்ளதாக புகார் அளிக்கப் பட்டுள்ளது,
திருமணமாகி சில மாதங்களிலேயே சங்கரின் மருமகன் மீது பாலியல் புகார் அளிக்கப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை உறுதி செய்யப் பட்டால் ரோஹித்திற்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப் படலாம் என கூறப்படுகின்றது !