“பிக் பாஸ் டைட்டில் வெற்றிபெற தகுதியானவர்கள் இவர்கள் இருவரும் தான் இவர்களுக்கு கொடுங்கள். ” தர்சன் வெளியேறிய பின் காயத்திரி போட்ட பதிவு..
இன்னும் வெறும் 4 நாட்களே மீதமுள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. தற்போது பெரிதாக எந்த ஒரு டாஸ்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் படவில்லை. விருந்தினர்களின் வருகை தான் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருகின்றது.
100 நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரபலங்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளர் காயத்திரி ரகுராம் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தர்சனின் வெளியேற்றம் கவலையை கொடுக்கிறது.
கண்டிப்பாக இனி தர்சனின் வாழ்க்கையில் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கும்.. அத்துடன் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருப்பவர்களில் டைட்டில் வெற்றிபெற தகுதியானவர்கள் முகென் மற்றும் சாண்டி தான்.
விஜய் டிவி இவர்களில் ஒருவருக்கு டைட்டில் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் என்ன நடக்கும் என்பது விஜய் டிவிக்கு மட்டுமே தெரியும் என தெரிவித்துள்ளார்…!!