நடிகை ஜோதிகாவை கேவலமாக திட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா..! இதோ அறிக்கை…!!
பிரபல சினிமா குடும்பத்தின் மருமகளாகவும் நடிகையாகவும் இருப்பவர் ஜோதிகா. 90 களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும், தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா கோயில்கள் மதஸ்தளங்களுக்கு செலவிடும் பணத்தை ஹொஸ்பிடல் பாடசாலை கட்டுவற்கு பயன்படுத்துங்கள், கடவுள் மனிதர்கள் உருவில் தான் இருக்கிறார் என கூறினார்.
இதனை சிலர் மோசமாக விமர்சித்ததுடன் கோயில் கட்ட பணம் கொடுக்க வேண்டாம் என கூறியதாக ஜோதிகாவை விமர்சித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேவலமாக திட்டி தீர்த்தனர்.
இது தவறு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்கள். இதற்கு சூர்யா இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஜோதிகா கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் எதற்காகவும் மன்னிப்பு கேட்கும் அவசியம் இல்லை என குறிப்பிட்டதுடன் ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்..!