“முதல் திரைப்படத்தில் நடிக்கும் உனக்கு என் வாழ்த்துக்கள்” சேரனின் பதிவு…யாருக்கு தெரியுமா.!? நீங்களே பாருங்களேன்.!;
பில்ம் பேர் விருதுகள், இந்திய மற்றும் மாநில விருதுகள் என அள்ளிக் குவித்தவர் நடிகர் சேரன். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து சேரன் தனது நீண்ட நாள் முயற்சியின் பின் பார்த்தீபன் மற்றும் மீனாவை வைத்து “பாரதி கண்ணம்மா” திரைப்படத்தை இயக்கினார்.
திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது அதன் பின் நல்ல சமூக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த சேரன் தன்னை நடிகராகவும் வளர்த்துக் கொண்டார். அதன் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் திரைப்படங்கள் சேரனுக்கு அமையவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைத்தார்.
வெற்றி பெறுவார் என மக்களால் எதிர்பார்க்கப் பட்ட சேரன் குறைந்த அளவிளான வாக்குகள் பெற்று வெளியேறினார். இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது சேரன் இயக்குனரும் நடிகருமான ஜெகனாத்தின் டுவிட் ஒன்றை பகிர்ந்ததுடன் வாழ்த்துக்களையும் தெருவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை திரைப்படத்தை இயக்கிய ஜெகனாத் சேரன் நடித்த “ராமன் தேடிய சீதை மற்றும் என் ஆளோட செருப்பை காணோம் திரைப்படங்களை இயக்கினார், படங்கள் பெரிதாக பேசப் படாததால் நடிப்பில் இறங்கினார். தற்போது அவரது குட்டி மகள் சினிமாவில் கால் பதிக்கிறார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர என் மகளுக்கு என் வாழ்த்துக்களும் உன் வளர்ச்சியில் எனக்கும் மகிழ்ச்சி இருக்கிறது என சேரன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சேரன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்..!
வளரட்டும்.. வாழட்டும்.. பெயர் சொல்லட்டும்.. புகழ் வெல்லட்டும்..
அவள் அறிமுகத்தில் நானும் சந்தோசம் கொள்வேன்.. https://t.co/LL5aSKsAoP— Cheran (@directorcheran) October 10, 2019