” நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு உண்மையான காரணம் இது தான் ” நடிகை கங்கனா ரனாவத் அதிரடி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு அனைவரும் ஒவ்வொரு காரணம் கூறி வரும் நிலையில் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ள காரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்ககையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இறந்த சுஷாந்த் பெரிய திரை, சின்னத் திரை உட்பட அனைத்திலும் சிறப்பாக நடித்து வந்தவர்.
4 சகோதரிகளுக்கு ஒரே ஆண் சகோதரன், சகோதரிகள் திருமணம் செய்தபின் சுஷாந்த் சீரியல் சினிமா என கஷ்டப் பட்டு தாராளமாக பணத்தை சேர்த்திருந்தார். இவருக்கு பண கஷ்டம் இருக்கவில்லை, உறவுகளால் தொல்லை இருக்கவில்லை. அப்படி இருக்கையில் காரணம் இல்லாமல் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்விக்கு கங்கனா ரனாவத் கொடுத்திருக்கும் ஒரே பதில் பாலிவுட் சினிமா தான்.
சுஷாந்த் சிங் திறமையான நடிகர். இவருக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் கொடுத்தார்கள் அனைத்து திரைப்படங்களும் ஹிட் ஆனது. ஆனால் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு அதிக இடம் கிடைத்தது. திறமைக்கு கிடைக்கவில்லை. சுஷாந்தை புக் செய்த பல தயாரிப்பாளர்கள் பின் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
ஆரம்பத்தில் இது பற்றி அலட்டிக் கொள்ளாத சுஷாந்த் தனது திறமையை நிரூபிக்க ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தோல்வி திரைப்படங்கள் நடிக்கவில்லையே என அவரது நண்பர்களிடம் புலம்ப ஆரம்பித்தார். இதுவே அதிகமாகி பல மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்தார். இவரது மரணத்திற்கு காரணம் முற்றிலும் பாலிவுட் சினிமா அவரை ஒதுக்க நினைத்ததே என கூறியுள்ளார்…!!