தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி பிரியவில்லை. சேர்ந்து வாழ்வர்கள். பிரியப் போவதாக கூறியது இதனால் தானாம். தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!!
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறு சண்டையினால் கோபத்தில் போட்ட பதிவு தான் அது, கண்டிப்பாக தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்ய மாட்டார்கள் என தனுஷின் தந்தை தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சிறு ஆறுதலை கொடுத்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். ரஜினிகாந்த் மீடியாக்களை சந்திப்பதை நிறுத்திய நிலையில் அவரது குருஜியை சந்திக்க சென்றுவிட்டார்.
ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே மீடியாக்களை சந்திக்கவில்லை. இதனால் உண்மை என்ன என்பது தெரியாமல் ரசிகர்கள் இருந்த நிலையில் தனுஷின் தந்தை அளித்த பேட்டியில் இருவரும் விவாகரத்து வரை செல்லவில்லை. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் வெளியிட்ட பதிவு தான்.
இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழுவார்கள். அதற்கு சில நாட்கள் ஆகும்..ஆனால் இருவரும் விவாகரத்து வரை செல்லவில்லை. என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சேர்ந்து வாழ்ந்தால் போதுமானது என கூறி வருகின்றனர்.!