சித்ராவின் மரணத்தின் பின் தடுமாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.! எப்போது தீரும் குமரன் என்கிற கதிருக்கு இந்த தடுமாற்றம்.?
விஜே சித்ராவின் மரணம் தாய் தந்தையை பாதித்த அளவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரையும் பாதித்துள்ளது.. சீரியலிலும் சீரியல் சூட்டிங் இடங்களிலும் ஒன்றாகவே பயணித்தனர். ஒரு வருடங்களுக்கு மேலாக ஒன்றாக சாப்பிட்டு கதைத்து சிரித்து வாழ்ந்தனர்.
மரணமடைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கூட ஒன்றாகவே இருந்தனர். இந்த நிலையில் சித்து மரணமடைந்தார், தற்போது சீரியலுக்கு புது முல்லை தேவைபடுகின்றதால் பாரதி கண்ணம்மா காவியாவை ஒப்பந்தம் செய்தனர்.
காவியா முல்லையாக நடிக்க ஆரம்பித்துள்ளார், ஆனால் கதிரால் நடிக்க முடியாமல் தடுமாறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது வரை இரண்டு அல்லது மூன்று டேக் மட்டுமே வாங்கும் கதிர் தற்போது 50 திற்கு மேற்பட்ட டேக் வாங்கிக் கொண்டிருக்கின்றாராம். சில நேரங்களில் நடிக்க முடியாமல் அமர்ந்து விடுகிறாராம். அதே போல்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல இடங்களில் புது முல்லையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான காட்சிகளில் கூட கண் கலங்கி விடுகின்றனராம் நடிக நடிகர்கள், இதில் இருந்து மீண்டு எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் பழைய சீரியலாக வரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.!!