ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். நிகழ்ச்சி பற்றிய ஏகப் பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.
இவர் பேசும் சில வார்த்தைகள் கூட வைரலாகியது. அதில் “என்னமா இப்படி பண்றீங்களேமா” பொலீஸ கூப்பிடுவேன் என்ற வார்த்தைகள் திரைப்படங்கள் மட்டும் இன்றி பாடலாகவும் வந்தது. இவர் சிறந்த நடிகை, இயக்குனர், தொகுப்பாளினி என்பதையும் தாண்டி சமூக சேவையாளர்.
அநியாயம் நடந்தால் எந்த இடம் என பார்க்காது தட்டிக் கேட்பார். எதையும் சமாளிக்கும் இவரது திறமையும் தட்டிக் கேட்கும் நேர்மையும் தான் இவரை பலர் நேசிப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
அதில் ஆண் குழந்தை ஒன்றை அடித்து உதைத்து தூக்கி வீசுறார். இதற்கு ஆவேசப் பட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மிருகங்கள் தண்டிக்கப் பட வேண்டும் என கூறியுள்ளார்.!
What is this, can’t bear to see!!! Did this get the attention of authorities? Can hear a lady voice, why is she shooting without stopping the ……..? Police has registered the case?! pic.twitter.com/rEA5CIncD2
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) May 22, 2019