நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை அவமான படுத்திய படக்குழு.! மனம் உடைந்து லாரன்ஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு..!
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் காஞ்சனா. லாரன்ஸ் இயக்கத்தில் லாரன்ஸ், சரத்குமார், ராய் லக்ஷ்மி, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த திரைப்படத்தை விரும்பி பார்த்தார்கள். இப்போது கூட பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் இப்படத்தினை இப்போது இந்தியில் ‘லக்ஷ்மிபாம்’ என்ற பெயரில் இயக்கி வந்தார் நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ். லாரன்ஸின் வேடத்தில் அக்க்ஷய்குமார் நடிக்க சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கின்றார். ராய் லக்ஷ்மி வேடத்தில் கியரா அத்வானி நடிக்கின்றார்.
அண்மையில் படத்தின் முதல் பார்வையினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது. இதற்கான காரணம் முதல் பார்வை போஸ்டர் வெளியிட்டது ராகவா லாரன்ஸுக்கு தெரியாதாம். தனது சொந்த கதையையும் உழைப்பையும் இதற்காக கொடுத்தவருக்கு தெரியாமல்
முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ” பணம் புகழை விட மரியாதை தான் முக்கியம்” என கூறியுள்ள ராகவா லாரன்ஸ் லக்ஷ்மி பாம் திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் கதை என்னுடையது தர முடியாது என கூற முடியும் ஆனால்
அப்படி செய்வது சரியான விடயம் அல்ல என்பதால் ஸ்கிரிப்டை கொடுத்துவிட்டு விலகிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அத்துடன் அக்ஷய் குமார் ரசிகர்கள் ராகவா லாரன்ஸின் பக்கம் நிக்கின்றனர்..!
Dear Friends and Fans..!I
In this world, more than money and fame, self-respect is the most important attribute to a person's character. So I have decided to step out of the project, #Laxmmibomb Hindi remake of Kanchana@akshaykumar
@RowdyGabbar @Advani_Kiara pic.twitter.com/MXSmY4uOgR— Raghava Lawrence (@offl_Lawrence) May 18, 2019