லொஸ்லியாவை வெறுத்து ஒதுக்கும் கவின்..! மனமுடைந்து தோழியிடம் சொல்லி அழுத லொஸ்லியா.!? காரணம் இது தானாம்..!!
காதல் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும். அதனை யாரும் தடை போட்டு நிறுத்த முடியாது. அப்படி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் காதல் வந்தது. இவர்களின் காதலை சிலர் நடிப்பு என்றார்கள், சிலர் ஸ்கிரிப்ட் என்றார்கள், போலி என்றார்கள் இப்படி ஏராளமான பெயர்கள் வைத்த போதும் காதல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என சிலரை இந்த ஜோடி நினைக்க வைத்தது.
யாரென சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்கும் அது வேறு யாருமல்ல கவின் லொஸ்லியா ஜோடி தான். இருவரது காதலும் உண்மையாக இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற கவின் மீண்டும் வீட்டிற்குள் வந்த போதும் அவர் காதல் குறையவில்லை லொஸ்லியாவின் காதலும் தான்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் கவினும் லொஸ்லியாவும் சேருவார்களா மாட்டார்களா என குழப்பத்தில் இருந்தவர்களுக்கு சோகமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. லொஸ்லியா இலங்கை வந்துவிட்டார். இனி கவின் லொஸ்லியா சேருவது நம்பிக்கை இல்லாத ஒன்று என கூறி வரும் நிலையில் லொஸ்லியா செல்லும் போது கூட கவின் வழியனுப்ப செல்லவில்லையாம்.
இதற்கு காரணம் லொஸ்லியாவின் அம்மாவாக இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தது போல் கவினுக்கு லொஸ்லியா மீது காதல் இல்லையாம். இதனை லொஸ்லியா மற்றும் கவினுக்கு நெருக்கமான போட்டியாளர் ஒருவர் அவரது நண்பர்களுக்கு கூறியுள்ளாராம். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அம்மாவை சமாளிக்க முடியும் அவர் என் காதலுக்கு தடை சொல்ல மாட்டார் என லொஸ்லியா கவினிடம் கூறினாராம்.
ஆனால் லொஸ்லியாவின் அம்மா கவினுடன் கதைப்பதே இல்லையாம். இதனால் மனமுடைந்த கவின் லொஸ்லியாவுடன் பேசுவதை தவிர்த்து வருகிறாராம். இதனை லொஸ்லியா பிக் பாஸ் போட்டியாளரிடம் கூறி அழுதுள்ளாராம்..!