பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியறிய லொஸ்லியா இலங்கையில் கொடுத்த முதல் பேட்டி..! என்ன கூறி இருக்கார் நீங்களே பாருங்கள்..!!
கேலி கிண்டல் அவமானங்களை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல் வரை வந்தவர் லொஸ்லியா. இலங்கையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் லொஸ்லியாவிற்கு கிடைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
பல கனவுகள் இருந்தாலும் இலங்கையில் இருந்து கலந்துகொள்கிறோம் இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகத்தில் சென்றவரை தமிழக மக்கள் அரவணைத்துக் கொண்டனர். ஆனால் சென்ற நோக்கத்தை உணர்வுகள் திசை திருப்ப வேறு பக்கம் பயணிக்க தொடங்கினார்.
இதனால் அணைத்த மக்களே வெறுக்க ஆரம்பித்தனர். இருப்பினும் இறுதி வரை போராடி வந்துவிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் பயணம் பற்றி இலங்கை ரசிகர்களின் கேள்விக்கு லொஸ்லியா பதில் அளித்துள்ளார். எங்கோ ஒரு இடத்தில் இருந்த என்னை இன்று உயரத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எடுத்து வந்துள்ளது.
இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவும் எம் நாட்டு மக்களின் ஆதரவுடன் கிடைத்ததால் தான் இறுதி வரை செல்ல கிடைத்தது. அதனால் அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டிற்குள் சில ஏமாற்றங்களையும் கற்றுக் கொண்டேன் இது எனக்கு பெரிய பாடமாகும் இருப்பினும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.!!