தொகுப்பாளர் மாகாபாவிற்கு ஏற்பட்ட எலும்பு முறிவு.! புகைப்படத்தை பார்த்து பிரார்த்தனை செய்வதாக கூறும் ரசிகர்கள்.!!;
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மாகாபா. தனது நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் கவர்ந்த மாகாபா தனது சிறப்பான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சினிமா நிகழ்ச்சி தொகுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் மாகாபா அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது கையில் கட்டுடன் வந்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னானது மாகாபா கையில் என்ன கட்டு என கேட்டு வந்தனர். இதற்கு அதில் அளித்துள்ள இவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, ஒரு விரல் முற்றிலும் இயங்கவில்லை, டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் இன்னும் குணமடையவில்லை, இதனால் தான் கையில் கட்டு போட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ஹிப் பாப் ஆதி ” “Get well soon anna” என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாகாபாவின் எலும்பு முறிவு சீக்கிரம் குணமாக பலரும் பிரார்த்தனை செய்வதாக கூறி வருகின்றனர்.!