மரணம் வரை நிறைவேறாமல் போன ஆச்சி மனோரமாவின் இறுதி ஆசை..!
கலைமாமணி,பத்மஸ்ரீ, மனோரமா ஆச்சியின் ஒரு ஆசை இறுதி வரை நிறைவேற ஆசையாகவே இருந்துள்ளது…. மனோரமா ஆச்சி பிறந்து ஒரு மாதத்தில் அவரது தந்தையார் தாயையும் சேயையும் விட்டுப் பிரிந்தார். ஒரு மாத குழந்தையுடன் தனித்து நின்ற மனோரமா ஆச்சியின் தாயார் வீட்டு வேலைகள் செய்து ஆச்சியை வளர்த்தார்.
மனோரமா ஆச்சியிக்கு 12 வயதாகும் போது தாயார் நோயில் விழுந்தார். வேறு வழி 10 ரூபாய் சம்பளத்திற்கு நாடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மனோரமா… நடிப்பு..இது தான் மனோரமாவின் உயிர். ஹீரோயின், குணச்சித்திர வேடம், காமெடி என நடித்துத் தள்ளினார். அப்போது தான் எல்லோரையும் போல் மனோரமாவும் காதலில் விழுந்தார்.
காதலித்தவரையே கரம்பிடித்து ஒரு குழந்தைக்கு தாயானார். தன்னுடைய தாய்க்கு நடந்த அதே விடயம் மனோரமா ஆச்சிக்கும் நடந்தது. திருமணமாகி 11 நாளில் குழந்தையை பார்க்க வந்த கணவன் ஜோதிடம் பார்த்ததாகவும் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என கூறி மனோரமா ஆச்சியை பிரிந்து வேறு திருமணம் செய்தார்.
தனிமை, ஏமாற்றம், இதனை தீர்த்தது மனோரமா ஆச்சியின் மகன் பூபதி தான். நடிப்பு நடிப்பு என மரணம் வரை நடித்த இவரின் ஆசை தனது தாய் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் இருவரும் நன்றாக நடித்தாய் என கூறவேண்டும் என்பதாம்..! ஆனால் மனோரமா நடிப்பில் எத்தனை வெற்றிபெற்ற திரைப்படமாக இருந்தாலும்
தாயார் மற்றும் சிவாஜி கணேசன் இவர்கள் இருவரும் சொல்லும் வார்த்தை இது அல்ல உன் நடிப்பு இன்னும் இருக்கு நடி என்றே இருந்ததாம். மற்றவர்களிடம் மனோரமாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளும் இவர்கள் இருவரில் ஒருவராவது தன்னுடைய நடிப்பை நேரடியாக பாராட்ட வேண்டும் என்ற ஆசை மரணம் வரை நடக்கவே இல்லையாம்..!