“இவர்கள் என்னை நிர்வாணமாக நிற்க சொன்னார்கள்” மீரா மிதுன் பரபரப்பு பேட்டி..!!
மாடலாக மக்களுக்கு அறிமுகமாகி சர்ச்சை நாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். தமிழ்ச் செல்வி என்ற பெயரை மாடலிங் துறைக்காக மீரா மிதுன் என மாற்றிக் கொண்ட இவர் திருமணமாகி முதல் இரவிலேயே கணவரை பிரிந்தார். பின் தனது திறமையால் சூப்பர் மாடல் பட்டம் பெற்ற இவர் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின் சில திரைப்படங்களில் நடித்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் தர்சன் தன்னிடம் காதலை கூறினார் என ஆரம்பித்து, சேரன் இடுப்பை பிடித்தார் என சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் பின் வெளியே வந்த மீரா ஏதாவது ஒன்றை கூறி பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்.
அது மட்டும் இன்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுபேற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் என்னை ரசிகர்கள் ரசித்து பழகி விட்டார்கள். நான் எப்படி புகைப்படம் போட்டாலும் ரசிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் காசு கொடுத்து என் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள்.
அவர்கள் எனக்கு நிர்வாணமாக புகைப்படம் போடுங்கள் என கொமெண்ட் செய்கிறார்கள். நான் அதனை கண்டுகொள்வதில்லை. நான் மாடல் நிர்வாணமாக நடிக்கும் நிலை வந்தால் அதனையும் செய்யத் தான் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்..!!