ஆண்களை முற்றிலும் வெறுக்கிறேன், மெர்சல் திரைப்பட நாயகி நித்யா மேனன் பேட்டி..! காரணம் இது தானாம்.!!
180, திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் வெப்பம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார், இருப்பினும் ஓ காதல் கண்மணி மற்றும் மெர்சல் நித்யா மேனனின் வெற்றிப் படங்களானது. தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நித்யா தெலுங்கு மலையாள மொழி திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது முதல் காதல் பற்றி பேசியுள்ளார். அதில் காதல் அழகானது என்று நினைத்தேன், ஆனால் அது அடக்கு முறையாக மாறியது, ஆரம்பத்தில் அன்பினால் என்று மனதை தேற்றிக் கொண்டேன் ஆனால் பின் தான் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன், என் உடல் அமைப்பு பற்றிய கிண்டல்கள் என்னை கஷ்டப் படுத்தியது,
உடல் எடை அதிகம் என்று நாம் நேசித்தவரே கிண்டல் செய்யும் போது மிகவும் வலிக்கும், அதுவும் விளையாட்டு என்று நினைத்தேன், ஆனால் பின் வேறு ஒரு காதலில் அவர்கள் விழுந்ததை ஏற்க முடியவில்லை, ஆண்கள் மீது வெறுப்பாகியது, எல்லா ஆண்களும் ஒன்று தான் என்பது புரிந்தது,
இனி காதலும் வேண்டாம் எதுவும் வேண்டாம், நிம்மதியாக வாழ்கிறேன், எனக்கு பிடித்ததை சாப்பிடுகிறேன், எனக்கு பிடித்தது போல் வாழ்கிறேன், நிம்மதியாக உறங்குகிறேன், இதைவிட வேறென்ன வேண்டும். எனக்கு முதல் காதல் மீது வெறுப்பு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.