மிருதுளா சசிதரனை தகாத வார்த்தை பேசி படுக்கைக்கு அழைத்த பிரபல தமிழ் வில்லன் நடிகர்..! சிக்கியது ஓடியோ ஆதாரம்..!
தனது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததற்காக பிரபல சமூக செயற்பாட்டாளரை தகாத முறையில் திட்டி படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்த விடயம் தொடர்பாக பொலீஸில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் மலையாளம், தெலுங்கு என ஏகப்பட்ட திரைப்படங்களை நடித்தவர் வினாயகன்.
இவர் சிம்புவின் சிலம்பாட்டம் , தனுஷுன் மரியான்,விஷாலின் திமிரு என ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். தமிழை விட இவரது பிறமொழி திரைப்படங்களே அதிகம். இந்த நிலையில் சமூக சேவகியான மிருதுளா சசிதரன் தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் 3ம் திகதி கருத்து பதிவொன்றை இட்டிருந்தார்.
சில நாட்களின் பின் நடிகர் வினாயகனை நிகழ்ச்சி ஒன்றிற்காக அழைக்க தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்திய போது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து பற்றி பேசியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி படுக்கைக்கு அழைத்ததாக மிருதுளா பொலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அத்துடன் விநாயகர் பேசிய ஓடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.இதனால் குறித்த நடிகர் மீது கல்பேட்டா பொலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.!